யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு அன்னமுத்தம்மா (வயது 72) என்பவரது சடலமே வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவர் வீட்டில் தனியாக வாழ்ந்துவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ரத்தக்கறை படிந்த கோடாலியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.