யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் ஆரம் பிக்கப்படும் என யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் உதவி மேற்பார் வையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண சிறைச்சாலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2 ஆயிரத்து 500 கைதிகள் தங்க வைக்கக்கூடிய வசதிகளுடன் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு 250 மில்லியன் ரூபாவையும் ஒதுக்கியுள்ளது. இலங்கையிலேயே வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்தில் சிறைச்சாலை இயங்குவது யாழ்ப்பாணத்தில்தான் எனவும் அவர் தெரிவித்தார். சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு நிகழ்வுகள் நடத்தும் போது இடப்பற்றாக்குறை காணப்படுவதோடு போதிய வசதிகளும் இல்லாதுள்ளது.
அதுமட்டுமின்றி கைதிகளை உரிய முறையில் பாதுகாப்பாக சிறை வைப் பதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வீதியின் ஓரத்தில் சிறைச்சாலை அமைந்திருப்பதால் கைதிகள் தப்பித்து செல்வதற்கு இலகுவாயுள்ளது.இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டே நவீன முறையில் புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்