Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » யாழ் போதனா வைத்தியசாலை நோயாளரைப் பார்வையிடும் நடைமுறையில் மாற்றம்

Jaffna-Hospitalயாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 1 ஆம் திகதி தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களைப் பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

காலை 6 மணிமுதல் காலை 6.30 மணிவரை, மதியம் 12 மணி தொடக்கம் பி.ப.1 மணிவரை, மாலை 5 மணி தொடக்கம் 6 மணிவரை.

காலையில் நோயாளருக்கு உணவு வழங்க மாத்திரம் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்காக இதுவரை காலமும் இருந்துவந்த பாஸ் அனுமதி நடைமுறை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளதோடு, ஒரே நேரத்தில் ஒரு நோயாளியின் அருகே இரு பர்வையாளர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் தமது தேசைக்குமென எடுத்துவரும் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் இளநீர்க் கோம்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை வைத்தியசாலை வளாகத்தில்விட்டுச் செல்லாது தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

வெற்றிலை சிகிரெட் மதுபானம் உள்ளடங்கிய போதைப்பொருட்களை எடுத்து வருவது பாவிப்பது நோயாளர்களுக்கு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும்.

சிறுவர்கள் முதியவர்கள் மிக இலகுவில் நோய்த்தொற்றுக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதால் இவர்கள் இயன்றவரை விடுதிகளில் பார்வையாளர்களாக வருவதை தவர்த்துக்கொள்வும்.

Leave a Reply

 
© 2015 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com