மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த ஆங்கிலதின விழா மன்றப்பொறுப்பாசிரியர் ஆர்.எஸ்.மோகனதாஸ் தலைமையில் கல்லூரியின் வாகீசர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதபர் இ.ஜெகநாதன் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவனும் சிறந்த நாடனக நெறியாளருமான எஸ்.நற்குணசேகரன், பழையமாணவர்சங்கத்தலைவர் எஸ்.விவேகாணந்த ராசா கல்லூரியின் முதல்வர் எஸ்.சிவணேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வகளாக பாடல்கள் நடனம் நாடகம் என்பன இடம்பெற்றன. குழுப்பாடல்களுக்கான நெறியாழ்கையினை ஆசிரியர் திருமதி வசீகரன் நடனத்திற்கான நெறியாழ்கையினை நடன ஆசிரியர் செல்வி து.சதா மற்றும்
நாடகத்திற்கான நெறியாழ்கையினை பழையமானவன் நற்குணசேகரன் மேற்கொண்டிருந்தார்.