வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந் தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திரு விழாவில் நாளை காலை 7 மணிக்கு முரு கப் பெருமானின் எழிற்கோலத் தேர் நடைபெறும்.
கடந்த காலங்களைவிட இம்முறை வெளிநாடுகளில் இருந்தும் தென்னிலங் கையில் இருந்தும் இத்திருவிழாக்களில் பல்லாயிரக் கணக்கானோர் பங்குபற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் ஆயத்தமாக பக்தர்களுக்குரிய வசதிகளைப் பொலி ஸாரும் மாநகரசபையினரும் மேற்கொண் டுள்ளனர்.
மக்களுக்கு வேண் டிய சுகாதார குடி தண்ணீர் வசதிகள் போன்றவற்றை யாழ். மாநகரசபையும் மற்றும் ஆலயச் சூழ லில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங் களைத் தடுப்பதற் காகவும் போக்குவரத்து வசதிகளை ஏற் படுத்தும் வகையிலும் சுமார் 600 பொலி ஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கும் மேலாக பரியோவான் முதலுதவிப் படையினர், சாரணர்கள் மற்றும் தொண்டர் படையினரும் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று மாலை ஐந்து மணிக்கு சப்பறத் திருவிழா நடைபெறும்.
You Are Here: Home » ஆலய செய்திகள், யாழ்.செய்திகள் » நல்லூரில் முருகப்பெருமானின் எழிற்கோலத் தேர்த்திருவிழா நாளை இன்று மாலை 5 மணிக்கு சப்பறம்