Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » “ஊடகப்படிகள்” நூல் வெளியீட்டு விழா

The-Bookசூரியன் எப். எம். செய்திச்சேவை முகாமையாளர் எம். இந்திரஜித் எழுதிய “ஊடகப்படிகள்” என்னும் நூல் நாளை 06.04.2013 (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் திருமறைக்கலா மன்றம் “கலைத்தூது மண்டபத்தில்“ வெளியிடப்படவுள்ளது

இந்த நூலில் ஊடகங்களின் அடிப்படைகளையும், செய்தி பற்றிய விளக்கங்களையும் ஊடகவியலின் வரலாறு, ஊடகவியலாளர்களும் நீதியும், செய்திகளின் பெறுமானம், செய்திகளின் தன்மை, செய்தி திரட்டல், பொதுக்கூட்டங்களில் செய்தி சேகரித்தல், செய்திபிரதிகள் எழுதும் பொது முறை, ஒலிபரப்பு ஊடகவியல், தொலைக்காட்சி முதலிய உப தலைப்புகளில் விளக்கமான முறையில் இந்த நூல் தொகுக்கப்ட்டுள்ளது.

ஊடகத்துறைசார்ந்தவர்கள் மட்டுமன்றி ஊடகத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களும், பொதுமக்களும் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூலாக இது அமையும்.

இதேவேளை இந்நூல் வெளியீட்டு விழா கடந்த மாதம் 19 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்றி – நிருஐன்

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com