சிவபெருமானின் பெருங்கருணையை வேண்டி 33 குண்டங்களில் ஆகுதி அளித்து அதியுத்த பட்சமாக கலாநிதி க.வைத்தீஸ்வரக்குருக்களின் ஆசியுடன் சிவஸ்ரீ க.ச.சோமாஸ்கந்தக் குருக்கள் தலைமையில் இக்குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
04 ஆம் 05ஆம் திகதிகளில் ( சனி மற்றும் ஞாயிறு தினங்களில்) அடியவர்கள் எண்ணைக்காப்புச் சாற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
06 ஆம் திகதி ( திங்கட்கிழமை ) அதிகாலை 6.30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வைபவத்தை முன்னிட்டு சிதம்பரம் முதலிய தலங்களிலிருந்து தீட்சிதர்களும் இங்கு வந்து கலந்து கொள்ளவுள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.