இச்சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த அரச பேரூந்தும் சுற்றுலாவிற்காக கொழும்பு சென்று யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பேரூந்தும் தைத்தடிப் பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த இருவரும் யாழ் போதனாவைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சாவக்கச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.