யா/வேலாயுதம் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் தினமும், புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு நிகழ்வும், “வேல் ஒளி” சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் 11.11.2012 பாடசாலை அதிபர் திரு ச.திரவியராசா தலைமையில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு சி.சத்தியசீலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் உயர்திரு சி.நந்தகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.