பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒழுங்கு செய்யப்பட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று யாழ். பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.
ன்று காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழக வாசலில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உள்ளே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தபோதும் , மாணவர்கள் அவர்களது கருத்துக்கு செவிசாய்க்காமல் தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.