யாழ்.அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகளை யாழ்.எய்ட் நிறுவனம் வழங்கியது.
25.11.2011 முற்பகல் 11.30 க்கு கல்லூரி அதிபர் திருமதி எஸ்.முருகசோதி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்களாக பிரபல வர்த்தகரும் சமூகசேவையாளருமான ஈ.எஸ்.பி நாகரத்தினம் மற்றும் சட்டத்தரணி கணேசவேல் அபிமன்யு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.