உரும்பிராய் கருணாகரப்பிள்ளையார் கோயில் வருடாந்த மகோற்சவத் திருவிழா நேற்று(03-09-2011) கொடியேற்றத்துடன் சிறப்புற ஆரம்பமாகியது.
காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 10ம் திகதி சனிக்கிழமை சப்பறத் திருவிழா, 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்று 12ம் திகதி தீர்த்தம் நடைபெற்று மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
மலேசியாவிலிருந்து வருகை தந்துள்ள சிவஸ்ரீ சபாரத்திக பரமேஸ்வர குருக்கள் இம் மகோற்சவ காலக் குருவாக இருந்து விழாவை சிறப்புற நடத்தவுள்ளார்.