சகல பாடசாலைகளினதும் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர் களாக அதிபர்கள் மட்டுமே இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள் ளது.
2011 ஆம் ஆண்டிலிருந்து சகல பாடசாலைகளிலும் பாடசா லை மேம்பாட்டுத்திட்டம் (PSI) அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் அதற்கு முன்பாக சகல பாடசாலை களிலும் இயங்கும் பழைய மாண வர் சங்கங்களின் தலைவர்களாக அதிபர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ் வரன் அறிவித்துள்ளார்.
பழைய மாணவர் சங்கங்கள் தொடர்பாக ஏற்கனவே கல்வி அமைச் சினால் வெளியிடப்பட்ட 27/1964 ஆம் இலக்கமும் 02.11.1964 ஆந் திகதி மற்றும் 21.06.1995 திகதிய சுற்றுநிருபங்களின் பிரகாரம் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்க ளாக அதிபர்களே இருக்க வேண்டு மெனவும் நிதிசார் விடயங்களுக்கு அவர்களே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.