வேதநாயகம் தபேந்திரனின் பூத்திடும் பனந்தோப்பு நூல் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
ஆறுதல் நிறுவன இயக்குனர் சு. டிவகலாலா தலைமையில் நிகழ்வுகள் நல்லூர், நாவலர் வீதியில் உள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி அழைக்கப்பட்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். இந்துக் கல்லூரி அதிபர் வீ. கணேசராசா, சென். சாள்ஸ் மகா வித்தியாலய அதிபர் ஞானப்பிரகாசம் ஆகியோருடன் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நாளேடுகளில் வெளியாகிய தனது ஆக்கங்களை முக்கியத்துவப்படுத்தி அவற்றினை ஒன்றிணைத்து இந் நூலை வேதநாயகம் தபேந்திரன் முழுமைப்படுத்தியுள்ளார்.
முதற் பிரதியினை பிரதம விருந்தினரிடமிருந்து யாழ் கல்வி வலைய முகாமைத்துவ உதவியாளர் நிசாகரன் பெற்றுக் கொண்டார்.
எதிர்கால சந்ததிக்கென்று பழையனவற்றை ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய தேவைகள் எம்மவரிடத்திலே உள்ளது. அதற்கான களமாகவே அவ்வாறான நூல்கள் அமையப் பெற்றுள்ளதாக நூல் வெளியீட்டிற்கு வருகை தந்திருந்த ஆர்வலர்களில் பலர் குறிப்பிட்டனர்.