நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று 29.09.2013 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் தலைவராக கல்லூரி அதிபர் செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.மா.திருவாசகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.சு.சற்குணராசா (கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிறுவுனர் நினைவுப் பேருரையினை திருமதி விமலாதேவி கனகரத்தினம் ( ஆசிரியர் Belvoir College International, பம்பலப்பிட்டி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மேற்படி நிகழ்விற்கு பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொரியவர்கள் என அனைவரையும் விழா சிறப்பிக்க வரவேற்கின்றனர்.
-Nirujan