“இயற்கையுடன் இணைந்த நிலைபேறான விவசாயத்தை நோக்கி.. ” எனும் தொனிப்பொருளில் வடமாகாண விவசாயத்திணைக்களம் விவசாயக் கண்காட்சி 2011 இனை திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், விவசாய ஆராய்சி நிலையம், கமநல அபிவிருத்தித்திணைக்கள விவசாயிகள் கூடம், வானிலை அவதானிப்பு நிலையம் ஆகியன இணைந்த வளாகத்தில் 05-09-2011 தொடக்கம் 09-09-2011 ஐந்து நாட்களுக்கு நாடாத்த உள்ளது.
இக்கண்காட்சியில் எதிர்காலத்தில் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் பயிர்செய்கை முறைகள், ஆராய்சித் தகவல்கள், விலங்கு வேளாண்மை, விவசாய இயந்திரமயமாக்கல் தொடர்பான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கண்காட்சி அமையவுள்ளது. அத்துடன் மத்திய விவசாயத்திணைக்களத்தின் பல பிரிவுகளும் பங்குபற்றி தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த உள்ளனர்.