நாளைய போட்டி தொடர்பான படதொகுப்புக்களை எமது புகைப்பட தொகுப்பில் பார்வையிட முடியும்
வடக்கின் மாபெரும் துடுப்பாட்டப்போட்டிஎன சொல்லப்படுகின்ற யாழ் பரியோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையே ஆன துடுப்பாட்போட்டி நாளை ஆரம்பமாகின்றது. யாழ்ப்பாண வீதியெங்கும் இரு கல்லூரிகளினதும் ஆதரவாளர்கள் பாடசாலை கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது ஆதரவுகளை தெரிவித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதேவேளை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நாடக மன்றத்தின் வெளியீடான “துடுப்பினை எடுடா துணிவோடு அடிடா …..” எனனும் இசை இறுவெட்டு வெளியீடு கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில் வேந்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
கல்லூரியின் நாடகமன்றத்தின் பொறுப்பாசிரியர் எஸ்.ரி.குமரன் வழிப்படுத்தலுடன் இசை அ.ஜெகதீஸ், பாடியவர்எ.நிலக்ஸன்,பாடலாக்கம் பா.கவிராஜ்.த.கிரிசாந், அ.அஜிகரன்.ஆகியோர் சேர்ந்த உருவாக்கிய மத்தியின் மைந்தர்கள் என்ற இசை இறுவெட்டினை யாழ்ப்பாணம் மத்திய கல்லாரியின் அதிபர் எஸ்கே.எழில்வேந்தன் வெளியிட்டு வைக்க விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஈ.பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.