யாழ் பல்கலைக்கழக கணக்கீட்டுத்துறைக்கும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நேற்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் ஒப்பந்தத்தில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பிரதம அதிகாரி சுஜீவ ராஜபக்ச ஆகியோர் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்ததின் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழககணக்கியல் துறை மாணவர்களில் நிதிக்கணக்கியலில் சிறந்துவிளங்கும் மாணவர்கள் இலங்கைபட்டயக் கணக்காளர்நிறுவனத்தின் தங்கப்பதக்கவிருதினைப் பெறுவதுடன் கணக்கியல் துறைமாணவர்கள் கல்விசார்மற்றும் தொழில்சார் நலன்களைப் பெறுவதற்கானவாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.