யாழ்.நாச்சிமார் கோவில் தேர்முட்டியில் இருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை யாழ்.பொலிஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
மிகவும் மோசமான நிலையில் உருக்குலைந்த காணப்பட்ட இந்த சடலத்தின் முகம் எரிந்த நிலையில் காணப்படுகின்றது. சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
இந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளயிடப்பட்டுள்ளது.