கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரிவினரால் யாழ்வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நிகழ்வு கடந்த 12ஆம்,13ஆம்14ஆம் திகதிகளில் மூன்றுநாட்கள் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி பட்டறையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி , பாடவிதானப்பிரிப்பு , ஆசிரியர் மேம்பாடு, ஆசிரியர் முகாமைத்துவம், ஆக்கத்திறன் விருத்தி , போன்றனவும் பாடவிதானப்பிரிப்பில் கணிதம், அழகியல் பாடங்களான சங்கீதம், நடனம், நாடகம், சித்திரம் போண்றன பற்றிய பயிற்சியும் மொழித்திறன் விருத்தியில் ஆங்கில மொழித்தேர்ச்சிக்கான பயிற்ச்சியும் வழங்கப்பட்டது.
அழகியல் பாட தேர்ச்சியில் நாடக நுட்பங்கள் தொடர்பான நாடக அரங்க பயிற்சி பட்டறை இடம்பெற்றது. நாடக அரங்க பயிற்சி பட்டறையின் பிரதான வளவாளராக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வழிகாட்டலும் ஆலாசனைப்பிரிவின் ஆசிரியர் நா.கு.மகிழ்ச்சிகரனும் வளவாளர்களாக யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் நாடகபாட ஆசிரியர் எஸ்.ரி.குமரன், மானிப்பாய் இந்துக்கல்லூரியின் நாடகபாட ஆசிரியர் எஸ்ரி.அருள்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டு அரங்க பயிற்சி பட்டறையை நடத்தினார்கள்.
இப்பயிற்சி பட்டறை நிகழ்வினூடாக முன்பள்ளி ஆசிரியர்கள் சிறந்த பயனை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் க. விமலநாதன் தெரிவித்துள்ளார்.