Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்ப்பாணம் பளைக்கு டிசம்பர் 15ற்கு முதல் புகையிரத சேவை

yarl devi opening பளைப் பகுதி வரையான ரயில் சேவையை டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பளை வரைக்குமான ரயிலின் வெள்ளோட்டத்தை டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பாக நடாத்தவும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரந்தன், பளை, ஆனையிறவு ஆகிய ரயில் நிலையங்களின் 90 வீதமான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

பளை ரயில் நிலையத்தில் ரயில்கள் திரும்பிச் செல்லும் முகமாக மேலும் மூன்று ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com