சேர்ந்த மைலோன் பிலிப்ஸ் என்பவரின் கருத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் மானிப்பாயை சேர்ந்த செல்வந்தர் திரு. வேலாயுதம் சங்கரப்பிள்ளை என்பவரால் 1910, சூலை 4 ஆம் நாள் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி முதல் கட்டிடமாக சங்கரப்பிள்ளை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதற்காக அவர் இடத்தையும் பணத்தையும் கொடுத்தார்.
பின்பு 1923 ம் ஆண்டு வாகீசர் பிராத்தனை மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. 1954 ஜூன் 2 இல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களால் பெரிய நூலகம் அன்பளிப்பு செய்யப்பட்டது. பின் 1955 இல் செல்லமுத்து கட்டிடமும் வீரசிங்கம் கட்டிடமும் அமைக்கப்பட்டது. 1965 இல் முத்துவேல் பிள்ளை கட்டிடமும் இரசாயன, பௌதீக ஆய்வுகூடங்களும் அமைக்கப்பட்டது. அடுத்து 1970 ல் பேராயிரவர் கட்டிடமும் 1973 ல் பெற்றோர் ஆசிரியர் சங்க கட்டிடமும் அமைக்கப்பட்டது. பின்பு 1980 ல் வீரசிங்கம் நிர்வாக கட்டிடமும் 1982 ல் மஸ்கன் சுப்பிரமணியம் ஞாபகார்த்த கட்டிடமும் 1983 ல் 3 மாடி கட்டிடமான சாறி மண்டபமும் அமைக்கப்பட்டது.
அதிபர்கள்
* 1910 – திரு.S. வீரசுவாமி பிள்ளை
* 1911 – திரு.P.சபாபதிப்பிள்ளை
* 1913 – திரு.G.சிவராவ்
* 1915 – திரு.T.P.ஹட்சன்
* 1916 – திரு.M.சபரத்னசிங்கே
* 1917 – திரு.T.H.ச்ரோச்செட்டே
* 1920 – திரு.S.சிவபாதசுந்தரம்
* 1921 – பாண்டித்.V.மயில்வாகனம்
* 1921 – சுவாமி விபுலானந்தர்
* 1922 – திரு.V.வீரசிங்கம்
* 1951 – திரு.C.நவரத்னம்
* 1956 – திரு.K.முத்துவேல்பிள்ளை
* 1972 – திரு.M.பேரயிரவர்
* 1979 – திரு.S.T.சாறி
* 1983 – திரு.S.V.மகேசவேலு
* 1990 – திரு.கேசவராஜன்
* 1999 – திரு.சண்முகநாதன்
* 2004 – திரு.K. ஜெகநாதன்
* 2005 – திரு.K.சிவனேஸ்வரன்