மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடார்ந்த இல்லங்களுக்கிடையிலான நாடக விழாஅண்மையில் நடைபெற்றது. இவ் விழாவில் க. கந்தவேளின் எழுத்துருவாக்கத்திலும் எஸ்.ரி.குமரன் , எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையிலும் ஆற்றுகை செய்யப்பட்ட கற்ப்பூரதீபம் நாடகம் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இந்நாடகத்தினை வாகீசர் இல்ல மாணவர்கள் நடித்திருந்தனர். இப்போட்டியில் இரண்டமிடத்தை சந்தரர் இல்லத்தின் கண்கெட்ட பிறகு நாடகமும் 3ம் இடத்தை மாணிக்கர் இல்லத்தின் தர்மம் தலை காக்கும் நாடகமும் பெற்றுக்கொண்டது. நாடக போட்டியின் சிறந்த நடிகனாக கற்ப்பூரதீபம் நாடகத்தில் நடித்த யுட்சகான் தெரிவு செய்யப்படார் .
கல்லூரி அதிபர் ச.சிவனேஸ்வரன் தலைமையில்நடைபெற்ற நிகழ்விற்கு கல்லூரியின் ஓய்வு பெற்ற நூலக ஆசிரியர் செல்வி இ.சுப்பையாப்பிள்ளை கலந்து கொண்டார்
You Are Here: Home » ஏனயவை, கல்வி » மானிப்பாய் இந்துக்கல்லூரி வருடார்ந்த நாடக விழா