Subscribe:Posts Comments

You Are Here: Home » நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » தென்னாபிரிக்காவில் நடைபெற்ற விஞ்ஞான போட்டியில் யாழ் இந்து கல்லூரி மாணவன் பதக்கம்

8 ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியானது டிசம்பர் 1ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் டேர்பன் மாநகரில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 5 போ் கொண்ட அணியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சார்பாக சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர், ஆனந்தராஜா ஹரிசங்கர் ஆகிய இருவரும் பங்குபற்றி இருந்தனர்.

இப் போட்டியில் 42 நாடுகளை சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். இப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் சுந்தரேஸ்வரன் வித்தியாசாகர் இலங்கை சார்பாக வெண்கல பதக்கத்தை வென்றார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com