சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான யப்பானிய நிறுவனத்தினரும், ஜப்பானிய மக்களும் இணைந்து யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிறுவர்களுக்கென சிகிச்சை விடுதி ஒன்றை மூன்று கோடி ரூபாய் செலவில்அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இச்சிறுவர் சிகிச்சை விடுதியின் அங்குரார்ப்பண விழா வெகுவிமரிசையாக இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சர்வதேச அபிவிருத்திக்கும், நிவாரணத்துக்குமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நொயிக்கியோ இசுக்காவா,யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா ஆகியோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்.