இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடாத்திய தரம் 10 மாணவர்களுக்கான 8 ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான சுந்தரேஸ்வரன் வித்யாசாகர்,ஆனந் தராஜா ஹரிசங்கர் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் தென்னாபிரிக்க டேபன் மாநகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கு பற்றவுள்ளனர்.
இதில் 50ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 300ற்கு அதிகமான மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
hi jaffna
keep up valga tamil valarga tamil