Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » கிளிநொச்சியில் துரிதகதியில் அமைக்கப்படும் காற்றாலைகள்

Palai windmillகாற்றலையின் மூலம் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் விதத்தில் கிளிநொச்சி-பளைப் பகுதியில் காற்றாலைகள் அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிர்மாணப் பணிகளை வடமாகாண சபையுடன் ஏற்பாட்டில் யூலிபவர், பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த காற்றாலைகள் புலோப்பளை, வள்ளிமுனை, பூநகரி கடல்நீரேரி பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றது இங்கு ‪மொத்தமாக 16 காற்றாலைகள் 80அடி‬ உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்த மாத நடுப்பகுதியில் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற போதும், தற்போதைய மழைக்காலநிலையால் இதனை இயக்குவது அடுத்த ஆண்டு ஜனவரி 2015 இற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Palai windmill (1)

 

 

 

 

 

 

 

நன்றி: நிருஐன்

Leave a Reply

 
© 2014 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com