இணுவில் பொதுநூலக சனசமூக நிலையத்தின் 12வது ஆண்டு நிறைவு விழாவும் வருடார்ந்த பரலிசளிப்பு வைபபமும் 30.03.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இணுவில் பொதுநூலகத் தலைவர் சொ.ஹரிசங்கர் தலைமையில் இணுவில் பொது நூலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக வடமாகா முதலமைச்சரின் செயலாளர் சி.திருவாகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன், வலிதெற்கு பிரதேசசபை சுன்னாகம் பொது நூலக பிரதம நூலகர் திருமதி இரத்திணேஸ்வரி கருணாநிதி அவர்களும்,கௌரவ விருந்தினர்களாக என்.ஏ.இராசரத்தினம், சு.குமாரசுவாமி, சு.முருகையா, ம.கஜந்தன், ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆசியுரையினை இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வை. சோமஸ்கந்தக்குருக்களும் தொடக்கவுரையினை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வணிகத்துறைத் தலைவரும் இணுவில் பொது நூலக போசகருமாகிய பேராசிரியர் க.தேவராஜா அவர்களும் நிகழ்தினார்கள்.
நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது கண்காட்சியினை வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் சி.திருவாகரன் நாடாவெட்டி திறந்து வைத்தார். சி.இராசரத்தினம் ஞாபகார்த்தமாக இலண்டனைச் சேர்ந்த இ.நவநீதன் குடும்பத்தினால் அமைக்கப்பட்ட புதிய நீர்த்தாங்கிக்கான பெயர்ப்பலகையை பேராசிரியர் சோ.தேவராஜா திரைநீக்கம் செய்து வைத்தார்.
முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வு ஆங்கில வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் இணுவில் பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவுப்போட்டி சதுரங்கப்போட்டி துடுப்பாட்டப்பேட்டி என்பவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
நன்றி: Sinathamby Kumaran