வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயத்தில் தரம் 02இல் கல்வி கற்கும் லிதகுகன் கலஸ்ரிக்கா வட மாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டுள்ள இப்பாடசாலை, முதல் தடவையாக நீண்ட கால இடைவெளியின் பின்னர் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.