கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையமானது இன்று (02) மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளர் முருகேசு சந்திரகுமார், வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பிராந்திய இரத்த வழங்கல் சேவை நிலையத்தினை திறந்து வைத்துள்ளனர்.